Palakkattu Pakkaththile - Vietnam Veedu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  99 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

கே.வி. மகாதேவன்

{ பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா } (2)

{ யாரம்மா
அது யாரம்மா } (2)

{ பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி } (2)

{ யாரம்மா
அது யாரம்மா } (2)

பாலிருக்கும்
பழமிருக்கும் பள்ளி
அறையிலே அந்த
பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்

சாந்தி என்றால்
என்னவென்று ராணியை
கேட்டாராம் ராணி தானும்
அந்த கேள்வியை ராஜாவை
கேட்டாளாம்

{ ஏனம்மா
அது ஏனம்மா } (2)

அவர் படித்த
புத்தகத்தில் சாந்தி
இல்லையே இந்த
அனுபவத்தை சொல்லி
தர பள்ளியில்லையே

கவிதையிலும்
கலைகளிலும் பழக்கம்
இல்லையே அவர் காதலிக்க
நேற்று வரை ஒருத்தி
இல்லையே

{ ஏனம்மா
அது ஏனம்மா } (2)

பூக்களிலே வண்டு
உறங்கும் பொய்கையை
கண்டாராம் தேவி பூஜையிலே
ஈஸ்வரனின் பள்ளியை
கண்டாராம்

மரக்கிளையில்
அணில் இரண்டு ஆடிட
கண்டாராம் ராஜா
மனசுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்

{ ஏனம்மா
அது ஏனம்மா } (2)

பரமசிவன் சக்தியை
ஓர் பாதியில் வைத்தாா் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தாா்

பாா் கடலில் மாதவனோ
பக்கத்தில் வைத்தாா் ராஜா
பத்மநாபன் ராணியை தன்
நெஞ்சினில் வைத்தாா்

{ யாரம்மா
அது நானம்மா } (2)

பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா

அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா

பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி

{ யாரம்மா
அது யாரம்மா } (2)

0



  0