பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
கே.வி. மகாதேவன்
{ பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா } (2)
{ யாரம்மா
அது யாரம்மா } (2)
{ பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி } (2)
{ யாரம்மா
அது யாரம்மா } (2)
பாலிருக்கும்
பழமிருக்கும் பள்ளி
அறையிலே அந்த
பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால்
என்னவென்று ராணியை
கேட்டாராம் ராணி தானும்
அந்த கேள்வியை ராஜாவை
கேட்டாளாம்
{ ஏனம்மா
அது ஏனம்மா } (2)
அவர் படித்த
புத்தகத்தில் சாந்தி
இல்லையே இந்த
அனுபவத்தை சொல்லி
தர பள்ளியில்லையே
கவிதையிலும்
கலைகளிலும் பழக்கம்
இல்லையே அவர் காதலிக்க
நேற்று வரை ஒருத்தி
இல்லையே
{ ஏனம்மா
அது ஏனம்மா } (2)
பூக்களிலே வண்டு
உறங்கும் பொய்கையை
கண்டாராம் தேவி பூஜையிலே
ஈஸ்வரனின் பள்ளியை
கண்டாராம்
மரக்கிளையில்
அணில் இரண்டு ஆடிட
கண்டாராம் ராஜா
மனசுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்
{ ஏனம்மா
அது ஏனம்மா } (2)
பரமசிவன் சக்தியை
ஓர் பாதியில் வைத்தாா் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தாா்
பாா் கடலில் மாதவனோ
பக்கத்தில் வைத்தாா் ராஜா
பத்மநாபன் ராணியை தன்
நெஞ்சினில் வைத்தாா்
{ யாரம்மா
அது நானம்மா } (2)
பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே
குழந்தையைப் போல்
ஒரு அம்மான்ஜி ராஜா
பாலக்காட்டு ராஜாவுக்கு
ஒரு அப்பாவி ராணி அவ சேலை
கட்ட பாத்தா போதும் அம்மாமி
பானி
{ யாரம்மா
அது யாரம்மா } (2)