பாடல் பாடல்

அஜீஸ் அசோக், சத்ய பிரகாஷ்

அஜீஸ் அசோக்

ஆஹா ஆ ஆ
உறவே உறவே வந்தாயே
உயிராய் உயிராய் நின்றாயே
மழையே மழையே வந்தாயே
ஓஹோ மனதில் உயிராய்
நின்றாயே

ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்

கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே

உயிரே வந்து
பிறப்பது உறவினில்
இருப்பது உறவுடன்
வாழ்ந்திட தானே
உனதுடல் நிழல் அது
உனதில்லை ஒதுங்கிட
பிறர் வந்து ஒதுங்கிட
தானே எல்லா பெண்ணும்
தாயாய் போனால் இனிமை
சேரும் தனிமை தீரும்

ஓ காயும் நிலவில்
நீ கரையை தேடாதே ஓ
காணும் உலகில் ஒரு
கள்ளம் பாராதே செல்வம்
அழியும் அட சொந்தம்
அழியாதே ஓ பேதை
மனமே மெய் அன்பை
என்றும் மறவாதே

ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்

{ கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே } (2)

0



  0