Kadaloram Vangiya Katru - Rickshawkaran (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  187 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

{ கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து } (3)

கதகதப்பா
மாறிடுமோ காதலித்தால்
ஆறிடுமோ

கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து

{ சிறு மணல் வீட்டில்
குடி ஏறும் நண்டானது இவள்
கண் பார்த்து மீன் என்று
திண்டாடுது } (2)

பொங்கும் நுரையோடு
கரை ஏறும் அலையானது
இந்த பெண் பார்த்து
நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

{ வண்ண பூ சேலை
மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக
இழுக்கின்றது } (2)

இடம் கொடுக்காமல்
தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம்
நெஞ்சம் துடிக்கின்றது

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

கோயில் சிலை
ஒன்று உயிர் கொண்டு நடை
போட்டதோ இரு விழி கொண்டு
என்னை பார்த்து எடை போட்டதோ

ஒரு துணை வந்து
விலை கொள்ள தடை
போட்டதோ அதை நான்
வாங்க அவள் நாணம்
தடை போட்டதோ

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

0



  0