பாடல் பாடல்
கிருஷ்ணராஜ் , வேல்முருகன் , சத்யன்
ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும் காதல் ஒரு
கண்ணாம்பூச்சி கலவரம் அது
எப்போதுமே போதையான
நிலவரம் (2)
அப்போ ஆணும்
பொண்ணும் ஒத்துமையா
இருந்துச்சு அது காதலிலே
உலகத்தையே மறந்துச்சு
அது வாழ்ந்த
போதிலும் இல்ல
இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல
தினம் ஜோடி
ஜோடியாய் இங்க செத்து
கிடக்கும் டா அத தூக்கும்
போதெல்லாம் என் நெஞ்சு
வலிக்கும் டா
நீ சொல்லும்
காதல் எல்லாம் மலை
ஏறி போச்சு சிட்டு தும்மல
போல வந்து போகுது இந்த
காதலு
காதலுன்னு
சொல்லுராங்க கண்டபடி
சுத்துராங்க டப்பு கொறைஞ்சா
மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க
காதல் எல்லாமே
ஒரு கண்ணாம்பூச்சி
இதில் ஆணும்
பெண்ணுமே தினம்
காணா போச்சு காதலிலே
தற்கொலைகள் கொறைஞ்சே
போச்சு
அட உண்மை
காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்
ஆனா ஒருத்தன் வாழுறான்
அட என்னடா
உலகம் இதில் எத்தன
கலகம் இங்க காதலே
பாவம் இது யார் விட்ட
சாபம்
ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும்
இன்னைக்கு காதல்
எல்லாம் ரொம்ப ரொம்ப
மாறிடிச்சு கண்ண பாக்குது
கைய கோர்க்குது ரூமு கேட்குது
எல்லாம் முடிஞ்ச
பின்னும் பிரண்டுனு
சொல்லிக்கிட்டு வாழுரவங்க
ரொம்ப பேருடா கேட்டு பாருடா
இப்ப காதல்
தோத்துட்டா யாரும்
சாவதே இல்ல அட
ஒன்னு தோத்துட்டா
ரெண்டு இருக்குது உள்ள
இப்ப எல்லாம்
தேவதாசு எவனும் இல்ல
அவன் பொழுது
போக்குக்கு ஒரு பிகர
பாக்குறான் அவ செலவு
பண்ணதான் ஒரு லூச
தேடுறா ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சி போச்சுனா
கை குலுக்கி பிரியிறா (2)
………………………..