பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
{ பகுத்தறிவு
பிறந்ததெல்லாம்
கேள்விகள்
கேட்டதனாலே } (2)
{ உரிமைகளை
பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள்
உள்ளதனாலே} (2)
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
……………………………
{ ஓராயிரம்
ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே } (2)
வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
{ நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும் } (2)
நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்
முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே
கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே
{ ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)