Satti Suttathada - Aalayamani (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  17 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி

{ சட்டி சுட்டதடா
கை விட்டதடா } (2)
{ புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா } (2)

நாலும் நடந்து
முடிந்த பின்னால்
நல்லது கெட்டது
தெரிந்ததடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
{ புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா } (2)

{ பாதி மனதில்
தெய்வம் இருந்து பார்த்து
கொண்டதடா மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி
வைத்ததடா } (2)

{ ஆட்டி வைத்த
மிருகமின்று அடங்கி
விட்டதடா } (2)
அமைதி தெய்வம் முழு
மனதில் கோயில்
கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
{ புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா } (2)

ஆரவாரப்
பேய்களெல்லாம்
ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை
நெஞ்சில் கூடிவிட்டதடா

{ தர்ம தேவன்
கோவிலிலே ஒலி
துலங்குதடா } (2)

மனம் சாந்தி
சாந்தி சாந்தியென்று
ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
{ புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா } (2)

{ எறும்புத் தோலை
உரித்துப் பார்க்க யானை
வந்ததடா நான் இதயத்
தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா } (2)

{ பிறக்கும் முன்னே
இருந்த உள்ளம் இன்று
வந்ததடா } (2)
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
{ புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா } (2)

0



  0