Kodiyile Malligai Poo - Kadalora Kavithaigal (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  41 views

பாடல் பாடல்

ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இளையராஜா

கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே

0



  0