Antha Sivagami - Pattanathil Bhootham (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  20 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

ஆஆஆ
ஆஆஆ…………

{ அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி } (2)

{ வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி } (2)

அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி

{ கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை } (2)

{ பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை } (2)

{ நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே } (2)

நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி

…………………………..
…………………………..

{ மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம் } (2)

{ நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ } (2)

{ காலம்
மாறினால் காதலும்
மாறுமோ } (2)

மாறாது
மாறாது இறைவன்
ஆணை

என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை

{ இந்த சிவகாமி
மகனுடன் } (2)
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி

வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி

…………………………..

{ அந்த சிவகாமி
மகனிடம் } (3)
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி

0



  0