Pachaikili Muthucharam - Ulagam Sutrum Valiban (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  25 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

{ பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ } (2)
பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ

பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

ஆஆஆ

{ பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ } (2)

தத்தை போலத்
தாவும் பாவை பாதம்
நோகும் என்று மெத்தை
போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு

வண்ணச்சோலை
வானம் பூமி யாவும் இன்பம்
இங்கு இந்தக் கோலம் நாளும்
காண நானும் நீயும் பங்கு

{ கண்ணில் ஆடும்
மாங்கனி கையில் ஆடுமோ } (2)

நானே தரும்
நாளும் வரும் ஏனிந்த
அவசரமோ

பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ

மெல்ல பேசும்
கள்ள பார்வை ஜாதி
பூவின் மென்மை சொல்ல
போகும் பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை

முள்ளில்லாத
தாளை போல தோகை
மேனி என்று அள்ளும்
போது மேலும் கீழும்
ஆடும் ஆசை உண்டு

{ அந்த நேரம்
நேரிலே சொர்க்கம்
தோன்றுமோ } (2)

காணாததும்
கேளாததும் காதலில்
விளங்கிடுமோ

பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ

பொன்பட்டாடை
மூடிச்செல்லும் தேன்சிட்டோடு
மெல்ல நான் தொட்டாடும்
வேளைதோறும் போதை என்ன
சொல்ல

கை தொட்டாட
காலம் நேரம் போகப்
போக உண்டு கண்பட்டாலும்
காதல் வேகம் பாதிப்பாதி
இன்று

{ பள்ளிக் கூடம்
போகலாம் பக்கம் ஓடி
வா } (2)

கூடம்தனில்
பாடம் பெறும் காலங்கள்
சுவையல்லவோ

பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ

மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ

பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ

{ ஹாஹாஹாஹா
ஹோஹோஹோஹோ
லலலலலலாலா } (2)

0



  0