பாடல் பாடல்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கே.வி. மகாதேவன்
{ ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட } (2)
ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
{ நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன } (2)
{ இல்லை உறக்கம்
ஒரே மனம் என்னாசை
பாராயோ } (2)
என் உயிரிலே உன்னை
எழுத பொன்மேனி
தாராயோ
ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
{ மன்னவனின்
தோளிரண்டை மங்கை
எந்தன் கை தழுவ கார்
குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய்
வெளுக்கும் } (2)
{ இந்த மயக்கம்
எழில் முகம் முத்தாக
வேர்க்காதோ } (2)
அந்த நினைவில்
வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக
ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட
ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா
பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்
தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்
ஆஆ பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்
ஆஆ தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்
{ என்ன துடிப்போ
அவள் நிலை நீ உணர
மாட்டாயோ } (2)
அந்த நிலையில்
அந்த சுகத்தை
நான் உணரக்
காட்டாயோ
ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட
ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா