பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு } (2)
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
{ தெய்வத்தின் கட்டளை
ஆறு } (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
{ ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி } (2)
{ சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும் } (2)
இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
{ எல்லா நன்மையும்
உண்டாகும் } (2)
{ ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு } (2)
{ உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும் } (2)
{ உண்மை என்பது
அன்பாகும் பெரும் பணிவு
என்பது பண்பாகும்} (2)
இந்த நான்கு
கட்டளை அறிந்த மனதில்
{ எல்லா நன்மையும்
உண்டாகும் } (2)
{ ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு } (2)
ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம்
என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு
கட்டளை அறிந்த
மனது
{ ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம் } (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
{ தெய்வத்தின் கட்டளை
ஆறு } (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு