இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்

இழந்தது எவை என இறைவன் கேட்டான் பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும் கால மாற்றத்தில் *இளமையை* இழந்தேன்

கோலம் மாறி *அழகையும்* இழந்தேன் வயதாக ஆக *உடல் நலம்* இழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்

எதையெல்லாம் இழந்தேனோ 

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்

அழகாகச் சிரித்தான் இறைவன்

கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய்

உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய்

"உறவுகள் கிடைத்ததால் *தனிமையை* இழந்தாய்"

"நல்ல பண்புகளால் *எதிரிகளை* இழந்தாய்"

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

*தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்

*திகைத்தேன் *

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்

இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

*இறைவன் மறைந்தான்..*
2



  2