பாடல் பாடல்
உதித் நாராயண்
எ.ஆர். ரஹ்மான்
…………………….
சஹானா சாரல்
தூவுதோ சஹாரா பூக்கள்
பூத்ததோ
சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ
என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ
கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது
சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ
தீம் தன தீம் தன
தின நா தின நா நா நா (4)
தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை இதழ்களில்
கடந்துவிடு உன் மீசையின்
முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை பூக்களில்
நிரப்பட்டுமா
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பூக்களின் சாலையில்
பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா
ஹோ
ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது ஹோ
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது
ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது
சஹானா சாரல்
தூவுதோ
சஹாரா பூக்கள்
பூத்ததோ
என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா
அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ
கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது
சஹாரா
சாரல்
தூவுதோ
ஹோ ஓ
ஓ ஓ
சஹாரா
பூக்கள் பூத்ததோ
………………………