பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கண்ணை நம்பாதே
{ உன்னை ஏமாற்றும் } (2)
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
{ காவலரே
வேஷமிட்டால் கள்வர்களும்
வேற்றுருவில் கண்முன்னே
தோணுவது சாத்தியமே } (2)
காத்திருந்து
கள்வர்க்கு கை விலங்கு
பூட்டி விடும் கண்ணுக்கு
தோணாத சத்தியமே
{ போடும் பொய்
திரையை கிழித்து விடும்
காலம் புரியும் அப்போது
மெய்யான கோலம் } (2)
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
உண்மை இல்லாதது
ஓம் முருகா
என்று சொல்லி
உச்சரிக்கும் சாமிகளே
ருத்ராச்ச பூனைகளாய்
வாழுறீங்க
சீமான்கள்
போர்வையிலே
சாமான்ய மக்களையே
ஏமாற்றி கொண்டாட்டம்
போடுறீங்க
பொய்மை
எப்போதும் ஓங்குவதும்
இல்லை உண்மை
எப்போதும் தூங்குவதும்
இல்லை
கண்ணை நம்பாதே
{ பொன்
பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண்மூடி போகிறவர்
போகட்டுமே } (2)
என் மனதை
நான் அறிவேன் என்
உறவை நான் மறவேன்
எதுவான போதிலும்
ஆகட்டுமே
நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என்
மூலதனம் ஆகும்
கண்ணை நம்பாதே
{ உன்னை ஏமாற்றும் } (2)
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது