பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
கே.வி. மகாதேவன்
{ கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே } (3)
{ கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் } (2)
{ இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் } (2)
இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே
{ நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி } (2)
{ அத்தனை
உண்மைக்கும் அவன்
சாட்சி } (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி
கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே
{ சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி } (2)
{ உண்மையை
சொல்பவன் சதிகாரன் } (2)
{ இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் } (2)
கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே
கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே