பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
அச்சம் என்பது
மடமையடா
{ அஞ்சாமை திராவிடர்
உடமையடா } (2)
{ அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா } (2)
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)
அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன் ஆஆ ஆஆ
கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன்
இமய வரம்பினில்
மீன்கொடி ஏற்றி இசை பட
வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை ஆஆஆ
கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை
களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட
எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
{ வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் யார் } (2)
மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே
நிற்கின்றார்
அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)
அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா