Yedhedho Ennangal Vanthu - Pattiyal (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  2015 views

பாடல் பாடல்

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

…………………………….

ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது

அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்

மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்

புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை
தெளிந்தது பார்

ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது

பழகிய ருசியே
பழகிய பசியே உயிரில்
உன் வாசம்

நெருங்கிய கனவே
நொறுங்கிய கனவே
உதட்டில் உன் சுவாசம்

விரலில்லா மலர்கள்
என்னை வந்து வருடியதே
காலில்லா காற்று தான்
என்னை தேடி தடவியதே
சிறகில்லா மேகமும் என்னை
என்னை மோதுதே நகமில்லா
இரவுகள் என்னை மட்டும்
கீறியதே

முதல் முறை தெரிந்தது
முதல் முறை புரிந்தது முதல்
முறை திறந்தது தனி உறவு இது
ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உணர்வு

ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது

கவனத்தே மறந்தேன்
கவனத்தே மறந்தேன்
உனக்குள் விழுந்திடவே

இமைகளை திறந்தேன்
இமைகளை திறந்தேன்
உடனே பறந்திடவே

யார் யாரோ சாலையில்
வந்து சென்று போகட்டுமே நீ
வந்து போகையில் கண்கள்
அகலம் ஆகிடுமே திரும்பாமல்
போனால் பாதி ஜீவன் தேய்ந்திடுமே
விரும்பாமல் போனால் மொத்த
ஜீவன் சாய்ந்திடுமே

அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்

மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்

புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை
தெளிந்தது பார்

அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்

மிதந்தது மிதந்தது
விரல் என மிதந்தது வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்

ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது

ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுதே

0



  0