Sollaamaley Kan Mun Thondrinai - Dhilip Varman Album – Uyirai Tholaithen (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  12 views

பாடல் பாடல்

திலீப் வர்மன்

திலீப் வர்மன்

சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே

உன்னை கண்டேன்
காதல் கொண்டேன் தூக்கம்
இழந்தேன் என்னை மறந்தேன்

தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை
மறந்திடுமா உன்னில்
உயிரை துளைத்தேன்

சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே

இது கனவா
நிஜமா எண்ணம்
அலைமோதுதே
எதுவரையில் எனக்கிந்த
உயிர் வேதனை

என்னை
அறியாமலே கால்கள்
நடை போடுதே வலி
கூட இந்நேரம் சுகமாகுதே

உன் காலடியில்
கிடப்பது மணலில்லை
என் மனம்தான் என்னை
தவிர உந்தன் சுவாசத்தை
யார் அறிவார்

தூரம் சென்றபின்
இதயம் சொன்னது
இதுதான் காதலா

சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே

நீ முதலா
முடிவா உள்ளம்
தடம் மாறுதே
முடிவல்லா நிலையென்று
உன்னை பார்க்கிறேன்

விடை தெரியாமலே
காதலில் கலந்தேனடி
இது என்ன மாயங்கள்
புதிரானதே

என் வாழ்க்கையிலே
காதலை உணர்ந்தது
உன்னிடம்தான்

என் உணர்வுக்கு
நீ நிழல் தந்த தாய்மையும்
நீயல்லவா

தூரம் சென்றபின்
இதயம் சொன்னது
இதுதான் காதலா

சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே

உன்னை கண்டேன்
காதல் கொண்டேன் தூக்கம்
இழந்தேன் என்னை மறந்தேன்

தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை
மறந்திடுமா உன்னில்
உயிரை துளைத்தேன்

0



  0