பாடல் பாடல்
இளையராஜா
செந்தூர பூவே
{ செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)
செந்தூர பூவே
தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்
கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே
வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே
நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே
மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்
வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே
செந்தூர பூவே