Orumurai Piranthen - Nenjirukkum Varai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 04, 2019   •  112 views

பாடல் பாடல்

ஹரிஹரன்

ஸ்ரீகாந்த் தேவா

……………………………….

ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன் உனக்கென
உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில் உன்னை
வைத்தே காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதில்லை தோற்றேன்
நீயே என் இதயமடி நீயே
என் ஜீவனடி (2)

…………………….

ஓ ஓ உந்தன் நெற்றி
மீதிலே துளி வேர்வை வரலாகுமா
சின்ன தாக நீயும்தான் முகம்
சுளித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விட மாட்டேன் உன்
நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விட மாட்டேன்

ஒரே உடல் ஒரே
உயிர் ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே

நீயே என் இதயமடி
நீயே என் ஜீவனடி

………………………..

…………………………

காற்று வீசும் மாலையில்
கடற் கரையில் நடை போடணும்
உன் மடிதான் பாய் மரம் படகேறி
திசை மாறனும் ஒளி வீசிடும் இரு
கண்கள்தான் வழி காத்திடும்
கலங்கரையா கரை சேரவே
மனம் இல்லையே என
தோன்றிதல் அது பிழையா

நெஞ்சுக்குள்ளே
உன்னை வைத்து பூட்டி
விட்டு சாவியை
தொலைத்து விட்டேன்

நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா ஒருமுறை
பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான்
கொடுப்பேன் மனதினில் உன்னை
சுமப்பதினாலே மரணத்தை
தாண்டி வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில் உன்னை
வைத்தே காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதில்லை தோற்றேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா

…………………………

0



  0