Naan Erikkarai Melirunthu - Chinna Thayee (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  78 views

பாடல் பாடல்

கே.ஜே. யேசுதாஸ்

இளையராஜா

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி ஒத்தையில
வாடுறேனே இக்கரையில

{ நான் மாமரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல } (2)

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக‌ போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

தூரக் கிழக்கு
கரை ஓரம் தான் தாழப்
பறந்து வரும் மேகம் தான்

உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும்
சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணாலம்
காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம்
தப்பாது

நான் மா மரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான் மாசக்
கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

கையேந்தும்
ஆட்டு குட்டி கன்னிப்
பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணை
காட்டி மையல் தீர
பேசாதோ

உன்னாலே
தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ
ஆயாச்சு

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக‌ போக
வேணும் அக்கரையில

நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில

நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல

0



  0