பாடல் பாடல்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
……………………
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க மன்னவா மன்னவா
மன்னவா…….
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க
……………………
{ கண்ணை விட்டு
போனாலும் கருத்தை
விட்டு போகவில்லை } (2)
{ மண்ணை விட்டு
போனாலும் உன்னை
விட்டு போகவில்லை } (2)
இன்னொருத்தி
உடலெடுத்து இருப்பவளும்
நானல்லவா கண்ணெடுத்தும்
பாராமல் கலங்குவதும் வீண்
அல்லவா
மன்னவா மன்னவா
மன்னவா…….
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க
{ உன் மயக்கம்
தீர்க்க வந்த பெண்
மயிலை புரியாதா } (2)
{ தன் மயக்கம்
தீராமல் தவிக்கின்றாள்
தெரியாதா } (2)
என் உடலில்
ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை
மதித்திருந்தால்
வந்தவளை வாழ விடு
மன்னவா மன்னவா
மன்னவா…….
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க