பாடல் பாடல்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இளையராஜா
என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா
சொன்னேள்
போங்கோ
என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ
என் கண்மணி
இருமான்கள்
பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும்
வழியேதம்மா
ஒரு ஜோடி
சேர்ந்து செல்லும்
பயணங்களில் உறவன்றி
வேறு இல்லை கவனங்களில்
இளமா மயில்
அருகாமையில்
வந்தாடும் வேலை
இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல
வில்லையோ
இந்தாமா
கருவாட்டு கூடை
முன்னாடி போ
என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ
என் கண்மணி
தேனாம்பேட்டை
சூப்பர் மார்க்கெட் இறங்கு
மெதுவாக
உன்னை கொஞ்சம்
தொட வேண்டுமே
திருமேனி எங்கும்
விரல்கள் படவேண்டுமே
அதற்கான
நேரம் ஒன்று வர
வேண்டுமே அடையாள
சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும்
மணமாலைகள்
கொண்டாடும்
காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ
என் கண்மணி