Nee Thoongum Nerathil (Male) - Manasellam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  59 views

பாடல் பாடல்

{ நீ தூங்கும்
நேரத்தில் என் கண்கள்
தூங்காது } (2)
கண்மணியே ஹோ
கண்மணியே

கண்ணுக்குள்
கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என் உயிரே
ஹோ என் உயிரே

பூ ஒன்று உன்
மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய்
போகுமே ஓ ஓ

நீ தூங்கும்
நேரத்தில் என் கண்கள்
தூங்காது கண்மணியே
ஹோ கண்மணியே

ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

மடி மீது நீ
இருந்தால் சொர்க்கங்கள்
உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ

ஒரு மூச்சில் இரு
தேகம் வாழ்வது நாம்
அன்றி வேராரோ நம் காதல்
வெள்ளத்தில் நடுவே நாம்
இருந்தாலும் என் நெஞ்சம்
தாகம் கொல்லுதே ஓஹோ …

நீ தூங்கும்
நேரத்தில் என் கண்கள்
தூங்காது கண்மணியே
ஹோ கண்மணியே

கண்ணுக்குள்
கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என் உயிரே
ஹோ என் உயிரே

கண்ணோடும்
நெஞ்சோடும் உயிரால்
உன்னை மூடி கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

மதி பறிக்கும்
மதி முகமே உன் ஒலி
அலை தன்னில் நானிருப்பேன்
எங்கே நீ சென்றாலும் அங்கே
நான் வருவேனே மனசெல்லாம்
நீதான் நீதானே ஓஹோ …

நீ தூங்கும்
நேரத்தில் என் கண்கள்
தூங்காது கண்மணியே
ஹோ கண்மணியே

பூ ஒன்று உன்
மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய்
போகுமே ஓ ஓ

நீ தூங்கும்
நேரத்தில் என் கண்கள்
தூங்காது கண்மணியே
ஹோ கண்மணியே
கண்மணியே ஹோ
கண்மணியே என் உயிரே
ஹோ என் உயிரே

0



  0